ஓடிச் சென்ற கண­­வ­னுடன் மனைவி பேஸ்புக்கில் நட்பு; உண்­மை­யான புகைப்­ப­டத்தை வெளியிட்டதால் அம்­­ப­லம்

முதல் மனை­வியை விட்டு ஓடிச் சென்­றவர், இரண்­டா­வது திரு­மணம் செய்து கொண்­டமை பேஸ்புக் மூலம் தெரிய வந்­ததால் பொலி­ஸா­ரிடம் சிக்­கி­யுள்ளார்.

தமி­ழ­கத்தின் பென்­னா­கரம் நெக்­குந்­தியை சேர்ந்தவர் பாலச்­சந்­திரன் (31). தர்­ம­பு­ரி­யி­லுள்ள தனியார் கல்­லூ­ரியில் உதவி பேராசிரியராக பணி புரிந்தார்.

மூன்று ஆண்­டுக்கு முன், அதே பகு­தியைச் சேர்ந்த அனு (27) என்­ப­வரை காத­லித்து திரு­மணம் செய்தார்.

இத்­ தம்­ப­திக்கு ஆண் குழந்­தையும் பிறந்­தது. இந்த நிலையில் இரு­வ­ருக்கும் இடை­யே­யான வாழ்க்­கையில் பிரச்­சினை ஏற்­பட்­டது. பாலச்­சந்­திரன் சொல்­லாமல் கொள்­ளாமல் மனை­வியை விட்டு பிரிந்து சென்­றுள்ளார்.

கணவர் திடீ­ரென மாய­மா­னதால் அதிர்ச்சியடைந்த அனு அவரைத் தேடி வந்தார். எந்தத் தக­வலும் கிடைக்­காமல் கவ­லைக்­குள்­ளானார். இந்­நி­லையில், அனுவின் பேஸ்புக் முக­வ­ரிக்கு ஒரு புகைப்­படம் வந்­தது.

அதில் பாலச்­சந்­திரன், வேறொரு குழந்­தை­யுடன் இருப்­பது கண்டு அதிர்ச்­சி­ய­டைந்தார். இதை­ய­டுத்து தனக்கு தெரி­யாமல் தன்­னு­டைய கணவன் இரண்­டா­வது திரு­மணம் செய்து கொண்­ட­தாக, பென்­னா­கரம் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்ளார்.

அதன்பேரில் பொலிஸார் விசா­ரணை நடத்­தினர். அப்­போ­து தான் பல உண்­மைகள் வெளிவந்­தன. பாலச்­சந்­திரன் அரி­யலூர் மாவட்டம் ஜெயங்­கொண்­டத்­தி­லுள்ள தனியார் கல்­லூ­ரியில் வேலை பார்த்து வரு­கிறார்.

பேஸ்­புக்கில் வந்த புகைப்­ப­டத்தில் இருப்­பது அவ­ரது குழந்­தைதான். பென்­னா­கரம் பொலிஸார், ஜெயங்­கொண்டம் சென்று பாலச்­சந்­தி­ரனை கைது செய்து நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்தி சிறையில் அடைத்­தனர்.

முதல் மனை­வியை பிரிந்து சென்ற பாலச்­சந்­திரன், ஜெயங்­கொண்­டத்­தி­லுள்ள தனியார் கல்­லூ­ரியில் வேலைக்கு சேர்ந்தார். அப்­போது தன்­னுடன் வேலை செய்யும் பேரா­சி­ரியை சுபா­ஷினி (25) என்­ப­வ­ருடன் அவ­ருக்கு காதல் ஏற்­பட்­டது.

அவ­ரிடம் இன்னும் திரு­ம­ண­மா­க­வில்லை என கூறி ஏமாற்றி இரண்­டா­வது திரு­மணம் செய்­துள்ளார். அவர்­க­ளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்­தது. அக்­ கு­ழந்­தை க்கு தற்­போது ஒரு வய­தா­கி­றது.

அந்த குழந்­தை­யுடன் தான் எடுத்­துக்­கொண்ட புகைப்­ப­டத்­தைத் தான் பேஸ்­புக்கில் பதி­வேற்­றி­யுள்ளார். மனை­வியைப் பிரிந்து சென்ற பாலச்­சந்­திரன் போலி­யான பெயரில் பேஸ்­புக்கில் ஒரு கணக்கைத் தொடங்­கினார்.

அதே­போல அனுவும் வேறொரு பெயரில் பேஸ்­புக்கில் இருந்தார். இரு­வரும் நட்­பா­கி­யுள்­ளனர். பழக்கம் ஏற்­பட்­டது. இரு­வரும் நல்ல நட்­புடன் பழகி வந்­தனர்.

இந்தநிலையில் அனுவின் பேஸ்புக்குக்கு தனது இரண்­டாவது மனைவிக்குப் பிறந்த குழந்தையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அனுப்பி தானாகப் போய் சிக்கிக் கொண்டுள்ளார்.