மட்டக்களப்பு வாவிகளில் படையெடுக்கும் அரிய வகை பாம்புகள்!! மக்கள் பீதியில்….

மட்டக்களப்பு, காத்தன்குடி வாவிகளில் படையெடுக்கும் ஒரு வகையான பாம்புகள் – மீனவர்கள் அச்சம் மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி வாவிகளில் ஒரு வகையான பாம்புகள் கடந்த இரண்டு தினங்களாக அதிகமாக கரையொதுங்குவதாக மீனவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

முக்குலியான் எனப்படும் ஒருவகை பாம்புகளே இது எனவும் இதன் காரணமாக மீனவர்கள் மீன் பிடிப்பதற்கு சிரமங்களை எதிர் நோக்குவதாகவும் மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த பாம்புக்கள் ஒரு அடியிலிருந்து இரண்டரை அடி நீளமானதாகவும் இறந்த நிலையிலும் கரையொதுங்குவதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

கால நிலை மாற்றத்தினால் இந்த பாம்புக்கள் கரையொதுங்கி இருப்பதாகவும் இது தொடர்பில் அவதானம் செலுத்துவதாகவும் பிடி திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட சுனாமிக்கு முன்பதாக இவ்வாறு ஒரு வகை இனந்தெரியாத பாம்புக்கள் மட்டக்களப்பு வாவி பகுதியில் கரையொதுங்கி இருந்ததாகவும் இதன் பின்னரே சுனாமி ஏற்பட்டதாகவும் மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.death_snake02