சாப்பாட்டுக்கு முன் இந்த ஜூஸை குடியுங்கள்!

பப்பாளி மற்றும் எலுமிச்சை பழங்கள் சந்தைகளில் மிகக் குறைவான விலைகளில் கிடைத்தாலும் இதில் ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றது.

பப்பாளி மற்றும் எலுமிச்சைப் பழங்களில் விட்டமின் A, B, C, ஆன்டி- ஆக்ஸிடன்டுகள், பொட்டாசியம், கனிமச்சத்துக்கள், பீட்டா- கரோட்டீன்கள், போன்ற நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.

சிறிது பப்பாளி பழத்தை நன்றாக அரைத்து, 3 டேபிள் ஸ்பூன் அளவு பப்பாளி ஜூஸுடன், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றை ஒன்றாக சேர்த்துக் கலந்துக் கொள்ள வேண்டும்.

இந்த ஆரோக்கியமான ஜூஸை தினமும் காலையில் எழுந்ததும், உணவு உண்பதற்கும் 1 மணிநேரத்திற்கு முன் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

இதே போல தினமும் குடித்து வந்தால், உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

பப்பாளி ஜூஸில் எலுமிச்சை சாறு கலந்துக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
  • பப்பாளி மற்றும் எலுமிச்சையில் ஆரோக்கியமான சத்துக்கள் அதிகமாக இருப்பதால், நமது உடலில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, ரத்தத்தில் உள்ள கொழுப்புக்களின் அளவைக் குறைத்து, இதய நோய்கள், பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
  • ஆரோக்கியமான இந்த ஜூஸை தினமும் குடித்து வருவதால், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, நோய் தொற்றுகள் ஏற்படுவதை தடுக்கிறது.
  • பப்பாளி மற்றும் எலுமிச்சை கலந்த ஜூஸில், பீட்டா-கரோட்டீன்கள் போன்ற சத்துக்கள் அதிகமாக இருப்பதால், நமது உடம்பின் உள்ள குடலில் ஆரோக்கியமான பாக்டீரியாக்களின் உற்பத்தியை அதிகரித்து, அசிடிட்டியைக் குறைத்து, செரிமான செயல்பாட்டை சீராக்குகிறது.
  • பப்பாளி மற்றும் எலுமிச்சை ஜூஸில் உள்ள உட்பொருட்கள், நமது உடம்பின் குடல், புரோஸ்டேட், ரத்தம் போன்றவற்றில் ஏற்படும் புற்றுநோய்களைத் தடுத்து, உடலை சுத்தம் செய்து, தேவையற்ற செல்களின் பெருக்கத்தையும், வளர்ச்சியையும் தடுக்கிறது.
  • ஜூஸில் உள்ள சத்துக்கள், நமது உடம்பின் நோயெதிர்ப்பு அழற்சித் தன்மை, ரத்த ஓட்டத்தை அதிகரித்து, மூட்டு வலி, தலை வலி மற்றும் ஆர்த்ரிடிஸ் போன்ற பிரச்சனைகளை தீர்க்கிறது.
  • காலையில் இந்த ஜூஸை குடிப்பதால், கண் பார்வை நரம்புகளுக்கு ஊட்டமளித்து, கண் பார்வையை கூர்மையாக்கி, கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பாக வைக்கிறது.
  • பப்பாளி மற்றும் எலுமிச்சை கலந்த ஜூஸில், ஆரோக்கியம் நிறைந்த சத்துக்கள் இருப்பதால், இது மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்களின் உற்பத்தியைக் குறைத்து, மனஅழுத்தத்தில் இருந்து விடுபடச் செய்கிறது.