ஒரே ஒரு செக்கனில் உங்கள் கைப்பேசியினை சார்ஜ் செய்யலாம்!

ஸ்மார்ட் கைப்பேசி பாவனையாளர்களுக்கு பெரும் தலைவலியாக இருப்பது மின்கலத்தின் சார்ஜ் ஆனது விரைவாக குறைவடைவதாகும்.

இதேவேளை அம் மின்கலங்களை மீண்டும் சார்ஜ் செய்வதற்கு நீண்ட நேரம் எடுக்கும்.

இப் பிரச்சினைக்கு தீர்வு தரும் வகையில் புதிய தொழில்நுட்பம் ஒன்றினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அதாவது மின்கலங்களுக்கு பதிலாக சூப்பர்கொள்ளளவி (Super Capacitors) எனும் இலத்திரனியல் சாதனத்தை பயன்படுத்துவதாகும்.

இதுவரை உள்ள கொள்ளளவிகள் அதிக அளவில் மின் சக்தியை சேமித்து வைத்திருப்பதில்லை. ஆனாலும் அதிக வினைத்திறனுடன் மின்சக்திய வெளிவிடக்கூடியன.

charger

எனினும் புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அதிகளவு மின் சக்தியை சேமித்து வைத்திருக்கக்கூடிய சூப்பர் கொள்ளளவிகளை உருவாக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் ஓரிரு செக்கன்களில் அக் கொள்ளவிகளை சார்ஜ் செய்ய முடிவதுடன், ஒரு வார காலத்திற்கு தொடர்ச்சியாக பாவிக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இத் தகவலை Central Florida பல்கலைக்கழக ஆராய்ச்யாளரான Nitin Choudhary என்பவர் தெரிவித்துள்ளார்.