நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்! பெண்ணுக்கு வாக்கு கொடுத்த ராகுல்காந்தி- பரபரப்பு பேட்டி

காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி தன்னை திருமணம் செய்துகொள்வதாக கனவில் வாக்குறுதி அளித்தார் என அக்கட்சியின் பெண் தொண்டர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தை சேர்ந்த இப்பெண் காங்கிரஸ் கட்சியின் தீவிர தொண்டர் ஆவார்.

தலித் வீடுகளுக்கு செல்வது, அவர்களுடன் சேர்ந்து உணவருந்துவது என ராகுல்காந்தியின் செயலால் ஈர்க்கப்பட்ட இப்பெண், அவர் மீதான காதலை தெரியப்படுத்தியுள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்காக நீண்ட நாட்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றேன், அவர் என்னை ஏன் திருமணம் செய்யக் கூடாது என கூறியுள்ளார்.

தலித் மக்களுக்கு உதவி செய்யும் அவர், ஏன் ஒரு தலித் பெண்ணை திருமணம் செய்துகொள்ள கூடாது, அமேதி தொகுதி எம்.பி.யை பலமுறை சந்தித்து இதுகுறித்து பேசியுள்ளேன் என கூறியுள்ளார்.

மேலும், என்னை திருமணம் செய்துகொள்வதாக ராகுல்காந்தி எனக்கு வாக்குறுதி அளித்தார். ஆனால் இது நிஜத்தில் இல்லை…கனவில்.

மேலும் எங்களுக்கு திருமணமாகி குழந்தையும் உள்ளது என தனது கனவு வாழ்க்கை குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.