கழிவறைக்குள் உல்லாசமாக இருந்த ஜோடி: அதிரடியாக கைது செய்த பொலிசார்

ஜேர்மனி நாட்டில் ரயில் நிலைய கழிவறைக்குள் நுழைந்து உல்லாசமாக இருந்த காதலர்கள் இருவர் பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜேர்மனியில் உள்ள Braunschweig என்ற ரயில் நிலையத்தில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்த சனிக்கிழமை அதிகாலை நேரத்தில் ரயில்வே கழிவறைக்குள் காதலர்கள் இருவர் நுழைந்துள்ளனர்.

நீண்ட நேரம் ஆன பிறகும் இருவரும் வெளியே வராததால், பொதுமக்கள் அவதியுற்று கதவினை அடிக்கடி தட்டியுள்ளனர்.

ஆனால், காதலர்கள் இருவரும் இதனை கவனிக்கும் நிலையில் இல்லை.

பொறுமையை இழந்த பொதுமக்கள் ரயில் நிலைய பொலிசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் ‘நாங்கள் பொலிஸ் அதிகாரிகள். கதவை உடனடியாக திறங்கள்’ என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பொலிசாரின் குரலை கேட்டும் உள்ளே இருந்த காதலர்கள் கதவை திறக்கவில்லை. ஆத்திரம் அடைந்த பொலிசார் கதவை உடைக்கும் நிலைக்கு சென்றுள்ளனர்.

சூழ்நிலையை உணர்ந்த காதலர்கள் இருவரும் உடனடியாக ஆடைகளை அணிந்துக்கொண்டு வெளியே வந்துள்ளனர்.

கழிவறைக்குள் நிகழ்ந்தவற்றை யூகம் செய பொலிசார் 28 வயதான ஆண் மற்றும் 25 வயதான பெண் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இருவரிடம் விசாரணை செய்ததபோது அவர்கள் இருவரும் போதையில் இருந்தது தெரியவந்துள்ளது.

மேலும், சிறை தண்டனையை தவிர்ப்பதற்காக ஆண் சுமார் 600 யூரோ(94,560 இலங்கை ரூபாய்) அபாரதம் செலுத்தி வழக்கில் இருந்து வெளியேறியுள்ளார்.

பெண் அபராதம் செலுத்த மறுத்துள்ளதால் அவரிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.