இன்று மாலை ஜெயலலிதா டிஸ்ஜார்ஜ்?

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22ம் திகதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இவர் பூரண நலம்பெற்று வீடு திரும்ப வேண்டி அதிமுக பிரமுகர்கள், தொண்டர்கள் தீவிர பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதல்வருக்கு செயற்கை சுவாசம் நீக்கப்பட்டு விட்டதாகவும், நோய்த் தொற்று முற்றிலுமாக குணமாகிவிட்டதாகவும் அப்பல்லோ தலைவர் பிரதாப் சி ரெட்டி நேற்று அறிவித்தார்.

இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு ஜெயலலிதா டிஸ்ஜார்ஜ் ஆகவுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.