மஹிந்தவின் பிறந்த நாளில் தனயன் கொடுத்த இன்ப அதிர்ச்சி!

முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்தராஜபக்சவின் புதல்வர் ரோஹித்த ராஜபக்ச இசைத்துறையில் அண்மைக்காலமாக அதிதீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றார்.

இந்த நிலையில் இன்றைய தினம்,தனது 71வது பிறந்த நாளைக் கொண்டாடும்அப்பாவுக்காக பாடல் ஒன்றை இயற்றி பாடியுள்ளார்.

தற்போது சமூக வலைத்தளங்களின் ஊடாக குறித்த பாடல் வைரலாகி கொண்டு வருகின்றது.

மஹிந்தவின் பெருமைகளை வெளிப்படுத்தும் நோக்கில் பாடல் வரிகள்அமைக்கப்பட்டுள்ளன.

அண்மைக்காலமாக இசைத்துறையில் ஆர்வம் செலுத்தி வரும் ரோஹித்த பல பாடல்களைஇயற்றியுள்ளார்.

அரசியல் பரம்பரையை சேர்ந்திருந்தாலும்,சாதாரண குடும்பத்தில் ஒவ்வொருவரும் தன்தந்தை மீது வைத்திருக்கும் அன்பை வெளிக்காட்டும் நோக்கில் ரோஹித்தவின் இந்தபாடல் அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.