30 லட்சம் பேரை வெளியேற்றுவேன் – ட்ரம்ப் அதிரடி பேட்டி

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் டொனால்ட் ட்ரம்ப், தான் பதவியேற்றதும் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் 30 லட்சம் பேரை வெளியேற்ற திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

தான் சொன்னதுபோல், மெக்ஸிகோவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே சுவர் எழுப்பப்படும் என்றும் இன்று ஒரு தொலைக்காட்சி பேட்டியில் அதிரடியாகக் கூறியுள்ளார். இதனால் ட்ரம்ப் எதிர்ப்பாளர்கள் அரண்டு கிடக்கிறார்கள்.