சென்னையில் கனடா வாழ் ஈழத்தமிழருக்கு நேர்ந்த அவலம்…!

500 மற்றும் 1000 ரூபா நாணயத்தாள்கள் செல்லாத என இந்திய பிரதமர் அண்மையில் அறிவித்துள்ள நிலையில், இந்தியா முழுவதும் ஸ்தம்பித்து போயுள்ளது என்றே கூறவேண்டும்.

இந்த திடீர் அறிவிப்பின் காரணமாக பொது மக்கள் பாரிய அசொளகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். இதன் தாக்கம் இந்தியர்களை தாண்டி வெளிநாட்டவர்களையும் வெகுவாக பாதித்துள்ளது.

இந்நிலையில், வெளிநாட்டு பணத்தை இந்திய பணமாக மாற்றியதற்கான சான்றிதழ் இல்லாத காரணத்தினால் 500 மற்றும் 1,000 ரூபாய் நாயணத்தாள்களை மாற்ற முடியாமல், இலங்கைத் தமிழர் ஒருவர் இந்தியாவில் பரிதவித்துள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்றை மேற்கோள் காட்டி வெளியாகியுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கனடாவை சேர்ந்த இலங்கை தமிழர் பரமேஸ்வரன் கடந்த 28ஆம் திகதி தனது மனைவியுடன் சென்னை வந்துள்ளார். அவர் தனது செலவுக்காக, ஒரு இலட்சம் ரூபாய் மதிப்பிலான கனடா டொலரை இந்திய ரூபாவாக மாற்றியுள்ளார்.

இந்நிலையில, திருப்பதி சென்ற பரமேஸ்வரன் கடந்த 9ஆம் திகதி மீண்டும் சென்னைக்கு திரும்பிய அவர், செல்லாது என அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நாணயத்தாள்களை மாற்ற முடியாமல் பரிதவித்துள்ளார்.

தன்னிடம் இருந்த 500, 1,000 ரூபாய் நாணயத்தாள்களை மாற்றுவதற்காக வங்கிக்கு சென்ற போதும் தன்னால் பணத்தை மாற்ற முடியாம் போயுள்ளது. 19ஆம் திகதி நாங்கள் மீண்டும் கனடா புறப்பட இருக்கிறோம்.

நாங்கள் இந்தியா வரும்போது, எங்களுக்கு கிடைக்கும் குறைந்த நாட்களில் பல்வேறு இடங்களுக்கு செல்வதற்காக திட்டமிட்டு இருந்தோம் என பரமேஸ்வரன் குறிப்பிட்டுள்ளதாக அந்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.