மருமகளை கொலை செய்த மாமனார் : வெளியான பகீர் காரணம்

திருமணமான பெண்ணை வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தி கொலை செய்த மாமனாரின் செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பெரிய ஊரான முசாபர்நகர் அருகில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் சரிதா. சில மாதங்களுக்கு முன்னர் திருமணமான அவர் அதே ஊரில் உள்ள தன் கணவர் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் சில தினங்களாக சரிதா விட்டில் இல்லாததால் அக்கம் பக்கத்தினர் இது குறித்து அவர் வீட்டில் இது குறித்து கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள் சரியாக பதில் ஏதும் சொல்லாததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்து மக்கள் இது குறித்து பொலிசில் தகவல் அளித்துள்ளனர்.

பொலிசார் வந்து சரிதாவின் மாமனாரிடம் இது குறித்து மிரட்டி கேட்ட போது அவர் திடுக்கிடும் உண்மையை கூறியுள்ளார். அதாவது தான் வரதட்சணை பணம் அவரிடம் கேட்டதாகவும் அதற்கு அவர் தர மறுத்ததாகவும் இதனால் கோபமடைந்து மருமகள் என்றும் பாராமல் அவரை கொலை செய்து அருகில் இருந்த வாய்காலில் சடலத்தை போட்டு விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதையடுத்து உடனே வாய்காலுக்கு சென்ற பொலிசார் சரிதாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.

பின்னர் சரிதாவை கொலை செய்த அவர் மாமனாரையும் அதற்கு உடந்தையாக இருந்த சரிதாவின் கணவரையும் பொலிசார் கைது செய்துள்ளார்கள்.