அம்பாந்தோட்டை துறைமுகத்தை யார் வாலும் திரும்பப் பறிப்போம்! – மஹிந்த ராஜபக்ச எச்சங்கினாரிக்கை

அம்பாந்தோட்டை துறைமுகம், மத்தல விமான நிலையம் உள்ளிட்ட நிறுவனங்களை கொள்வனவு செய்ய உத்தேசித்துள்ள இந்திய, சீன முதலீட்டார்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார். பேருவளையில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

எனது காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களான அம்பாந்தோட்டை துறைமுகம், மத்தல விமான நிலையம் என்பன உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களையும் கொள்வனவு செய்ய உத்தேசித்துள்ள இந்தியா, சீனா என எந்த நாட்டு முதலீட்டார்களாக இருந்தாலும் எனக்கு கவலை இல்லை. எமது ஆட்சியில் அவை அனைத்தையும் அரசுக்கே எடுத்துக்கொள்வோம் என்ற விடயத்தை நான் கூறி வைக்க விரும்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.