அமெரிக்காவுடனான உறவுகள் மேலும் வலுவடையும்!

அமெரிக்காவுடனான உறவு மேலும் வலுப்படும் என இலங்கை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரப் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கை இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்திய பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலின் போது வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை 1948ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்ததில் இருந்து, அமெரிக்காவுடன் சிறந்த நல்லுறவை பேணி வருவதாகவும், ட்ரம்பின் நிர்வாகத்தின் கீழ், அந்த உறவு மேலும் விரிவடையும் எனவும் வெளிவிவகார அமைச்சர் நம்பிக்கை வெளிட்டுள்ளார்.

இலங்கை 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் திகதியில் இருந்து சர்வதேசத்துடனான உறவை மேம்படுத்த மீண்டும் நடவடிக்கை மேற்கொண்டது.

அதன்படி, அமெரிக்காவுடன் கடந்த 20 மாதங்களில் அமெரிக்காவுடனான உறவை மேம்படுத்த தாம் நடவடிக்கை மேற்கொண்டதாகவும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.