விபரீதமான விளையாட்டு.. 140 அடி உயரத்தில் இருந்து விழுந்த இளம்பெண்! பதற வைக்கும் வீடியோ

தென் கொரியாவில் பங்கி ஜம்பிங் விளையாட்டின் போது நடந்த விபரீத சம்பவம் ஒன்று வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தென் கொரியாவின் Chuncheon நகரில் பங்கி ஜம்பிங் என்பது மிகவும் பிரபலமான விளையாட்டாக உள்ளது.

காலில் கயிரைக் கட்டிக் கொண்டு உயரமான இடத்தில் இருந்து கொண்டு குதிக்கும் திரில் அனுவத்தை இதன் மூலம் பெறலாம். பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளுடனே இது மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில் இந்த விளையாட்டில் ஒரு இளம்பெண் ஈடுபட்ட போது அந்த கயிறு அப்படியே அறுந்தது.

இதனால் அவர் 140 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார். இருப்பினும் அவர் தண்ணீரில் விழுந்ததால் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவ்சமாக உயிர் தப்பியுள்ளார்.

சிலவற்றை சரியாக மேற்கொள்ளாமல் விட்டுவிட்டதால் இந்த விபரீத சம்பவம் நடந்ததாக அந்த பெண் தெரிவித்துள்ளார்.

மொபல் போனில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.