டொனால்ட் ட்ரம்ப்பின் வெற்றியால் அமெரிக்கா வாழ் இலங்கையர்கள் அதிருப்தி!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகளால் அங்குள்ள இலங்கையர்களுக்கு அதிருப்பதியை ஏற்படுத்தியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக ஹிலாரி கிளின்டன் வருவதையே பெரும்பான்மையான இலங்கையர்கள் விரும்பியதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

San Franciscoவில் வசிக்கும் இலங்கையர்கள் சிலர் கொழும்பு ஊடகம் ஒன்று கருத்து வெளியிட்டுள்ளனர்.

டிரம்பிடம் வெள்ளையர்கள் ஆதிக்கத்திற்கான கொள்கைகளையே இலங்கையர்களின் வெறுப்புக்கான காரணம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் குடியேற்றவாசிகள் தொடர்பில் ஹிலாரி கிளின்டன் சாதகமான கொள்கைகளை கொண்டிருந்தார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் இறுதி முடிவு இலங்கையில் ஜனவரி 8ஆம் திகதி ஏற்பட்ட மக்கள் புரட்சியை போன்றதென அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது கல்லின் மேற்கொள்ளப்படுகின்ற போராட்டம். என்ன நடக்கும் என்பது தெரியாது. எனினும் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார் என்பதனால் புளோரிடா நகரில் உள்ள இலங்கையர்கள் வருத்தத்தில் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.