டொனால்ட் ட்ரம்ப்பிற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் வாழ்த்து

அமெரிக்காவின் 45ம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்பிற்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

புதிதாக தெரிவு செய்யப்பட்ட அமெரிக்க ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக ஜனாதிபதி தனது டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

வரலாற்று சிறப்பு மிக்க தேர்தல் வெற்றிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை டொனால்ட் ட்ரம்ப்பிற்கு இலங்கையின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டொனால்ட் ட்ராம்ப்பின் வெள்ளை மாளிகைக்கான பயணம் உண்மையில் மகத்துவமானது என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது அரசாங்கத்துடன் மிக நெருங்கிச் செயற்பட எதிர்பார்த்திருப்பதாக பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.