அதிர்ச்சியில் சிம்பு ரசிகர்கள்- ஏன் இப்படி?

சிம்பு அனைத்து பிரச்சனைகளிலும் இருந்து வெளிவந்து தன் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இவரின் நடிப்பில் இந்த வாரம் அச்சம் என்பது மடமையடா படம் திரைக்கு வரவிருந்தது.

முன்பதிவு எல்லாம் தொடங்கி பல இடங்களில் ஹவுஸ்புல் கூட ஆகிவிட்டது. இதை தொடர்ந்து ரசிகர்கள் பேனர்கள், போஸ்டர்கள் என கலக்கி வருகின்றனர்.

இந்த நேரத்தில் நேற்று மேடி எடுத்த அதிரடி முடிவால், ரூ 500, 1000 பணத்தை கண்டாலே அனைவரும் பயந்து ஒதுங்கி வருகின்றனர்.

இதனால், பல இடங்களில் அச்சம் என்பது மடமையடா, கடவுள் இருக்கான் குமாரு படக்காட்சிகளின் முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.