நண்பனுடன் மனைவி உடலுறவு ; கணவன் மனைவியிற்கும் நண்பனிற்கும் கொடுத்த கொடூர தண்டனை

நெருங்கிய நண்பருடன் பாலியல் உறவு வைத்த மனைவியை கத்தியால் தாக்கி கொலை செய்த கணவன், நண்பரின் ஆணுறுப்பையும் வெட்டி வீசிய சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் ஷாமா கிராமப் பகுதியில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த பகுதியில் வசித்துவந்த விளாட்மீர் சிதோரோவ் என்பவர் தமது நெருங்கிய நண்பருடன் பாலியல் உறவு வைத்துக்கொண்ட தனது மனைவியை கத்தியால் பல முறை குத்தி கொலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அதே அறையில் தப்பிக்க வழியின்றி சிக்கிக்கொண்ட தனது நெருங்கிய நண்பரின் ஆணுறுப்பை வெட்டி வீசியுள்ளார்.

இதனால் அதிக இரத்தப்போக்கு மற்றும் உடனடியாக மருத்துவ உதவியை நாட முடியாமை உள்ளிட்ட காரணங்களால் குறித்த நபரும் மரணமடிந்துள்ளார்.

குறித்த சம்பவத்தன்று குறிப்பிட்ட நபர் தமது குழந்தைகளுடன் வீட்டிலேயே இருந்துள்ளார். அப்போது அவரது மனைவி தமது தோழியை சந்திக்க செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

தோழியை சந்திக்க செல்லும் மனைவியை இவரது நண்பர் தமது வாகனத்தில் கொண்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே சந்தேகத்தின் அடிப்படையில் தமது மனைவியின் தோழியின் வீட்டுக்கு சென்ற பாரத்த போதே கணவனுக்கு  மனைவி தோழி வீட்டுக்கு செல்லவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த கணவன் தனது நண்பனை சந்திக்க அவரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

தனது நண்பனின் வீட்டினுள் சென்று பார்த்தபோது இவரது மனைவி நண்பரின் படுக்கையறையில் ஆடை கலைந்த நிலையில் படுத்திருப்பதை கண்டுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த அவர் மனைவியை சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு நண்பரின் ஆணுறுப்பையும் வெட்டி வீசியுள்ளார்.

தற்போது குறித்த நபரை கைது செய்துள்ள பொலிஸார் விசாரணை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.