கட்டுநாயக்க விமானசேவைகள் ஜனவரி முதல் மத்தளையில்!

இலங்கையின் இரண்டாவது விமான நிலையம் மத்தளையில் திறக்கப்பட்டது. எனினும் அதன் மூலம் வருமானம் ஈட்டும் வழிவகைகள் ஏற்படுத்தப்படவில்லை.அதனால் அத்திட்டம் தோல்வியடைந்தது.

தேசிய முகைமைத்துவ மாநாடு இன்று காலை கலதாரி ஹோட்டலில் நடைபெற்றது.

அந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுரைகயிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

2017 -ம் ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரையான காலப்பகுதியில்  கட்டுநாயக்க விமான நிலைய ஓடு பாதையில் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

குறிப்பிட்ட நேரம் கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்படவுள்ளது. இதன்போது மத்தள விமான நிலையம் பயன்படுத்தப்படவுள்ளதாக பிரதியமைச்சர் எரான் விக்ரமரட்ண தெரிவித்துள்ளார்.