தமிழ் படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன் : சாய் பல்லவி

வெளிநாட்டில் மருத்துவம் படித்து முடித்து இருப்பவர் சாய்பல்லவி. கோத்தகிரியில் பிறந்த தமிழ் பெண்ணான இவர் படிப்பை முடிக்க ஒரு வருடம் இருந்தபோது ‘பிரேமம்’ மலையாள படத்தில் பொழுதுபோக்குக்காக நடித்தார். இது மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இவர் நடித்த ‘மலர் டீச்சர்’ பாத்திரம் பிரபலமாகி, அனைவராலும் பேசப்பட்டது.

மீதம் இருந்த ஒரு வருட படிப்பை முடிப்பதற்கு முன்பே ஏராளமான படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. என்றாலும் படிப்பை முடித்தார். அதன்பிறகு ‘களி’ என்ற மலையாள படத்திலும் ‘பிந்தா’ என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். ஆனால் தமிழ் படத்தில் நடிக்க அவரை யாரும் அழைக்கவில்லையாம். இதுபற்றி கூறியுள்ள சாய்பல்லவி….

“தமிழ் படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். ஆனால் இதுவரை யாரும் அழைக்கவில்லை. நடிக்க வந்த பிறகு இப்படித்தான் நடிப்பேன். அப்படி நடிக்கமாட்டேன் என்று சொல்லக்கூடாது. பாத்திரத்துக்கு தேவை என்றால் அதற்கு ஏற்ப நடிப்பதில் தவறு இல்லை. திணிக்கப்பட்ட காட்சி என்றால் அதில் நடிக்க மாட்டேன். தமிழில் நல்ல கதையையும், பாத்திரத்தையும் எதிர்பார்த்துக் கொண்டிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.