சந்திரிக்காவை இரகசியமாக சந்தித்த ரவி!

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நேற்ற சந்தித்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

வரவு-செலவுத் திட்டம் தொடர்பில் இரகசிய கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்காகவே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்களின் பல்வேறு நிவாரண நடவடிக்கை தொடர்பில் வரவு-செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாக சந்திப்பின் இறுதியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், வரவு-செலவுத் திட்டம் தொடர்பான இரகசியங்களை தெரிவிப்பதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்திருந்தார்கள் என ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.