“அதிக சிரிப்பும், அழுகையும் முகத்தில் சுருக்கங்களை ஏற்படுத்துமாம்” – ஆய்வில் தகவல்…!!!

“அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” என்பார்கள். உண்மை தான். முகத்தை வைத்து தான் அவனுடைய தன்மைகளை புரிந்து கொள்வார்கள். அப்படிப்பட்ட முகத்திற்கு ஆபத்து நேரிடும் பொழுது, அதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதாவது, அதீத சிரிப்பும், அதீத அழுகையும் முகத்தில் சுருக்கங்களைக் கொண்டு வரும் என்கிறார்கள் தோல் நிபுணர்கள். சிரிப்பைப் புன்னகையாக வெளிப்படுத்துபவரின் முகம்தான் உலகில் மிகத் தாமதமாக சுருக்கம் அடைகிற முகம்.

எதற்கெடுத்தாலும் இளித்துக்கொண்டும் முகத்தைக் கோணிக்கொண்டும் இருப்பது தோலுக்கு ஆபத்து. மேக்அப் போட்ட பெண்கள் சிலர், உதடுகள் விரிய விரிய சிரித்துக்காட்டி போஸ் கொடுப்பதை ஆட்டோ மெட்டிக் அணுகுமுறையாக வைத்திருக்கிறார்கள்.

மேலும், இப்படியெல்லாம் இருப்பது அவர்களின் தோலைப் பாதிப்பது மட்டுமல்லாமல், எதிரில் உள்ள ஆளையும் பாதிக்கும் என்றும் மருத்துவர்கள் சொல்கின்றார்கள்.