80 வயது தாயை புறக்கணித்த ஏழு பிள்ளைகளின் கொடூர செயல்!

பண்டாரகமவில் ஏழு பிள்ளைகளினால் புறக்கணிக்கப்பட்ட தாயொருவரை பொலிஸார் மீட்டுள்ளனர்.

அந்தப் பகுதியை சேர்ந்த 80 வயது தாய் ஒருவர் அவரின் பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்ட நிலையில், அது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று செய்துள்ளார்.

குறித்த வயோதிப தாய்க்கு 5 மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் இருப்பதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தன்னிடம் இருந்த சொத்துக்கள் அனைத்தையும் தன் குழந்தைகளுக்கு சமமாக பிரிந்து கொடுத்த போதும், எந்தப் பிள்ளையும் தன்னை கவனிக்கவில்லை என குறித்த தாய் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பண்டாரகம பொலிஸ் நிலையத்தில் முன்னிலையான இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகனும் அவரை தாயாக ஏற்றுக் கொள்ள மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில், ஹொரண நீதவான் நீதிமன்றில் தெரிவிக்க வேண்டும் என பண்டாரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.