முதல்வர் எப்போர் வீடு திரும்புவார்? அப்பல்லோ தலைவர் பேட்டி

முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவது குறித்து அப்பல்லோ நிர்வாக தலைவர் பிரதாப் சி ரெட்டி விளக்கமளித்துள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் அப்பல்லோ மருத்துவர்களுடன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள், லண்டன் மருத்துவர்கள், சிங்கப்பூர் மருத்துவர்கள் என தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அப்போலோ மருத்துவமனை நிர்வாகத் தலைவர் பிரதாப்ரெட்டி முதல்வர் வீடு திரும்புவது குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது, முதல்வர் முதல்வர் ஜெயலலிதா வேகமாக குணமடைந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

அவர் முழுமையாக குணமடைந்து வருகிறார். முதல்வர் எப்போது வீடு திரும்புவார் என்பது குறித்து அவரே முடிவு செய்வார்.

மருத்துவகுழுவின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி இது என தெரிவித்துள்ளார்.