ஹம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணம்! ராஜபக்ஸர்களால் கொள்ளையடித்து எத்தனை கோடி?

ஹம்பாந்தோட்டை துறைமுக நிர்மாண நடவடிக்கையின் போது ராஜபக்ஸர்களினால் அறவிடப்பட்டுள்ள பணம் கிட்டத்தட்ட 270 மில்லியன் அமெரிக்க டொலர் (40,000 மில்லியன் ரூபாய்) என உறுதியாகியுள்ளது.

துறைமுக நிர்மாணிப்பு நடவடிக்கைக்காக சீன மெர்சன்ட் வங்கியில் இருந்து 1350 மில்லியன் டொலர் கடன் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் சீனா துறைமுக நிறுவத்தினால் இந்த துறைமுகம் 1080 மில்லியன் டொலருக்கு கோரப்பட்டுள்ளது.

வணிக துறைமுகத்தின் பெறுமதி இவ்வாறு குறைமதிப்பிடப்படாது என்பதனால், மேலதிக பணம் தரகாக அறிவிடப்பட்டுள்ளமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

துறைமுக அபிவிருத்தி திட்டத்தின் மூலம் ராஜபக்ஸர்கள் பெற்றுக்கொண்ட தரகு பணம், நிர்மாண பணிக்காக செலவிடப்பட்ட மொத்த தொகையின் 20 சதவீதமாகும்.