கணவன் இறந்த பணத்தில் ஒரு பிளாட்..! நொடியில் தரைமட்டம்..! நேரில் பார்த்து கதறி அழுத ஒரு அன்னை..!!

ஊரே வேடிக்கை பார்த்தது..கைதட்டி ஆரவாரம் செய்தது..! வியந்தது..! இது ஒரு புறம்..!!

ஆனால் சம்பாதித்த பணம் எல்லாம் சேர்த்து ஆசை ஆசையாய் அந்த கட்டிடத்தில் ஒரு பிளாட் வாங்கிபோட, ஒரே ஒரு பட்டாசில் தரைமட்டம் ஆனதைப் பார்த்து நெஞ்சம் வெடித்து கதறி அழுதவர்கள் எத்தனை பேர்..?

அதில் ஒரு விதவைப் பெண் குமுறி அழுத காட்சி அங்கிருந்தவர்களை கண்ணீர் கசியச் செய்தது..!

அந்தப் பெண்ணின் கணவர் கார் விபத்தில் சிக்கினார்.  சாகும் முன் மனைவியை அழைத்து எனக்கு நிறைய பணம் வரும் அதில் வீடு வாங்கிக்கொள். உன்னை சொந்தக்காரர்கள் ஏமாற்றி பணத்தை பறித்துக் கொள்வார்கள் என்று கூறியிருக்கிறார்.

அந்த பெண்ணும் மவுலிவாக்கம் பில்டிங்கில் ஒரு பிளாட் வாங்க அதுதான் நொடியில் தரை மட்டம் ஆனது..! இறைவா.! ஏன் இந்த பெண்ணை  கை விட்டீர்..!