ஜெயலலிதா கைரேகை மூலம் சொத்துகள் கைமாறியுள்ளது! வெளியான பரபரப்பு தகவல்

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தெரியாமல் அவரின் கை ரேகை மூலம் சொத்துகள் கைமாறுகிறது என திமுக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஜெயலலிதா செப்டம்பர் 22ம் திகதி முதல் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது உலகறிந்ததே.

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மூன்று தொகுதயில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் படிவத்தில் ஜெயலலிதா கைரேகை இடம்பெற்றிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, இதற்கு அதிமுக தரப்பில் விளக்ம் தரப்பட்டதை தொடர்ந்து தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில், தருமபுரியில் தி.மு.க. மாவட்டச் செயலாளர் தடங்கம் சுப்பிரமணி இல்லத் திருமண விழாவில் ஸ்டாலின் உட்பட கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்துக்கொண்டனர்.

விழாவில் பேசிய துரைமுருகன், ஜெயலலிதாவுக்கு தெரியாமல் பல சொத்துக்களுக்கு கைரேகை மூலம் உருட்டப்பட்டு கைமாறுகிறது.

ஜெயலலிதா எழுந்து வந்தால், யார், யார் உள்ளே செல்வார்கள் என்பது தெரியும் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.