கிளிநொச்சி வர்த்தகர்களுக்கு இழப்பீடு வழங்க அமைச்சரவை அங்கீகாரம்!

கிளிநொச்சி வர்த்தகர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. அண்மையில் கிளிநொச்சி சந்தைப் பகுதியில் அமைந்திருந்த பழக்கடைகள் முற்றாக எரிந்தும் ஏனைய கடைகள் பகுதியளவிலும் எரிந்து பெருமளவு நட்டத்தை ஏற்படுத்தியிருந்தது.

தீக்கிரையான கடைகளுக்கு நட்டஈடு வழங்குவது தொடர்பில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அமைச்சரவைப் பத்திரம் கடந்த ஒக்ரோபர் மாதம் 21ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டது. தீக்கிரையான 122 வர்த்தகர்களுக்கும் 74 மில்லியன் ரூபா வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டது. அத்துடன் கிளிநொச்சி மாவட்டத்தில் முழுமையான வசதிகளுடன்கூடிய தீயணைப்புப் படைப்பிரிவு ஒன்றை நிறுவுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தீக்கிரையான கடைகள் அனைத்தையும் மீள் புனரமைப்புச் செய்வதற்கு 150 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.