பிறந்து 4 நாட்களேயான பெண் குழந்தைக்கு பெற்றோரால் நேர்ந்த கதி! பின்னணி காரணம்?

ஐதராபாத்தில் பெற்றோரே பிறந்த நான்கு நாட்களான பெண் குழந்தையை 20,000 ரூபாய்க்கு விற்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கரேணி பகுதியை சேர்ந்த கிருஷ்ணா, சுஜாதா தம்பதியே இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கிருஷ்ணா, சிங்கரேணி தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் சுஜாதாவிற்கு மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. குடும்பத்தின் வறுமை நிலையை கருத்தில் கொண்டு, குழந்தையை விற்க பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.

தேவர்கொண்டா பகுதியில் குழந்தையை 20,000 விற்க முற்பட்டபோது தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் இடத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

இதனால் குழந்தையை வாங்க வந்த மர்ம நபர்கள் சம்பயிடத்திலிருந்து தப்பித்துள்ளனர். தகவல் அறிந்த பொலிசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யவுள்ளனர்.