அம்மாவை பிடித்த அம்மம்மா பேய் ? லண்டன் ஊடகம் பரபரப்பு தகவல்!!!!

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை பாதிக்கப்பட்டதற்கு பில்லி சூனியம் வைத்ததுதான் காரணம் என லண்டன் ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி முதல் சென்னை அப்பல்லோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு தற்போதும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் இதற்கான காரணம் பில்லி சூனியம் ஏவப்பட்டுள்ளது என புதுத் தகவல் வெளிவந்துள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த பிரபல ஜோதிடர் ஒருவர் தங்கள் பத்திரிக்கைக்கு அந்த செய்தியை கூறியதாக அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

திமுகவினர் சிலர் பல இலட்சங்களை செலவு செய்து, அவருக்கு எதிராக செய்வினை மற்றும் பில்லி சூனியம் ஆகியவற்றின் மூலம், அவரது உடல் நிலையில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம், திமுக கட்சியில் மட்டுமல்ல, அவரது சொந்த கட்சியிலேயே கூட யாராவது இப்படி செய்திருக்கலாம் என்றும் அந்த ஜோதிடர் கூறியதாக குறித்த செய்தியில் வெளியிடப்பட்டுள்ளது.

அதேபோல், சமீபத்தில் கருணாநிதி உடல் நிலை பாதிக்கப்பட்டதற்கும் பில்லி சூனியம்தான் காரணம் என அந்த ஜோதிடர் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

அம்மாவை பிடித்த அம்மம்மா பேய் என சமூக ஊடகங்களில் கொமெண்டுகள் வந்து குவிகின்றன .இந்த காலத்தில போய் பேயாவது பிசாசாவது .