மேல் மாகாணத்தில் பயணிகள் போக்குவரத்து சேவையாக செயல்படும் முச்சக்கர வண்டிகளின் பதிவு இன்று முதல் மீண்டும் ஆரம்பமாகியது.
2025 டிசம்பர் 31 வரை முச்சக்கர வண்டிகளின் பதிவு தொடரும் என மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் காமினி ஜாசிங்கே அறிவித்துள்ளார்.
தற்போது, மேல் மாகாணத்தில் 250,000 க்கும் மேற்பட்ட முச்சக்கர வண்டிகள் பயணிகள் போக்குவரத்து சேவையாக செயல்படுகின்றன என்று அவர் தெரிவித்தார்.
மேல் மாகாணத்தில் இயங்கும் எந்த முச்சக்கர வண்டிகளுக்கும் பதிவு உள்ளது.
எனவே, மேல் மாகாணத்திற்குள் சேவையில் ஈடுபடும் எந்த மாகாணத்தைச் சேர்ந்த சாரதிகளும் பதிவுகளை மேற்கொள்ளலாம் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.







