28 வயதில் திருமணத்திற்கு ரெடியான நடிகை!

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தனது 28வது வயதில் திருமணத்திற்கு தயாராகிவிட்டார். இதை அவரே அறிவித்துள்ளார்.

அவர் வேறு யாருமில்லை பிரபல ஹிந்தி நடிகை அவிகா கோர் தான். இவர் ‘பாலிகா வது’ என்கிற ஹிந்தி சீரியல் மூலம் பிரபலமானார். இந்த சீரியலில் ஆனந்தி எனும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

இதன்பின் ‘மார்னிங் வாக்’ படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமான இவர், அதனைத் தொடர்ந்து தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்து பல ஹிட் படங்களை கொடுத்தார். இந்த ஆண்டு இவர் நடிப்பில் தெலுங்கில் ஷண்முகா எனும் படம் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நடிகை அவிகா கோர் தனது திருமணத்தை உறுதி செய்துள்ளார். சமூக ஆர்வலர் மிலிந்த் சந்த்வானியை வருகிற 30ஆம் தேதி திருமணம் செய்துகொள்ளப் போவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை அவிகா கோர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் அவிகா கோர் மற்றும் மிலிந்த் சந்த்வானி ஜோடிக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. திருமண தேதியை நடிகை அவிகா அறிவித்தவுடன் ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை இந்த ஜோடிக்கு தெரிவித்து வருகிறார்கள்.