சிறுவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் 14 வயது சிறுவனின் இரண்டு பற்கள் உடையும் அளவுக்கு அடிக்கப்பட்டமை தொடர்பில் பயாகல பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாதிக்கப்பட்டவர் ஹல்கந்தவில, துவகொட பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். அவர், களுத்துறைநாகொட போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குழந்தையின் தாயார் பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
குழந்தையின் தாயார் அளித்த புகாரில், கடந்த 9 ஆம் திகதி மாலை, தனது வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு பிரார்த்தனை அறையில் தனது குழந்தை மற்றொரு குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்ததாகவும், “எங்களுடன் விளையாட இன்னொரு குழந்தையை அழைத்துச் செல்ல முடியாது” என்று கூறியதால் கோபமடைந்த குழந்தையின் மூத்த சகோதரர் தனது குழந்தையைத் தாக்கி கழுத்தை நெரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் தனது குழந்தையின் இரண்டு பற்கள் உடைந்ததாகவும், மற்றொரு பல் ஆடுவதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







