ஹிக்கடுவை, மீட்டியாகொட பகுதியில் துப்பாக்கிச்சூடு!

ஹிக்கடுவை, மீட்டியாகொட பகுதியில் இன்று மாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

உந்துருளியொன்றில் பிரவேசித்த இருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் உந்துருளி செலுத்துநர் ரீ-56 ரக துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்றை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.