சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களான விவேக், வடிவேலு என பலரின் காமெடி காட்சிகளில் நடித்து மக்களிடம் அங்கீகாரம் பெற்றவர் நடிகை பிரியங்கா.
பெரும்பாலும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இவர் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். மருதமலை, வில்லன் போன்ற பல படங்களில் நம்மை சிரிக்க வைத்துள்ளார்.
இவர் சமீபத்தில் தனது வாழ்க்கை பயணம் குறித்து பேசியுள்ளார்.
அதில் நடிகை பிரியங்கா, திருமண வாழ்க்கை எதிர்ப்பார்த்தபடி சரியாக அமையாத காரணத்தால் பல பிரச்சனைகள் இருந்தது, ஆனால் எனது குடும்பத்தினர் பக்கபலமாக இருந்தனர்.
தவறான ஒரு உறவில் இருந்து கஷ்டப்படுவதை விட அதில் இருந்து விலகி வருவது சிறப்பான முடிவு. எனது முன்னாள் கணவருக்கு இப்போது இரண்டாவது திருமணம் ஆகிவிட்டது, என்னையும் மறுமணம் செய்துகொள்ள சிலர் அறிவுறுத்தினர்.
எனக்கு விருப்பம் இல்லை, ஒருமுறை திருமணம் செய்தபோது பல பிரச்சனைகளை பார்த்து விட்டேன், இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் எனக்கு திருமணம் வேண்டாம் என கூறியுள்ளார்.