மேற்காசிய நாடான யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கோல்டன் விசா பெறுவதற்கான புதிய நடைமுறைகளை அறிமுகம் செய்துள்ளது. இது, இந்தியா மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும்.
இதன் சிறப்பு அம்சங்கள்
* வாழ்நாள் முழுதும் தங்கியிருக்கலாம்
* ஏற்கனவே உள்ள திட்டங்களின்படி, அந்த நாட்டில் குறைந்தபட்சம் 4.66 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தில் முதலீடு செய்ய தேவையில்லை. அதுபோல, தொழில்களிலும் முதலீடு செய்ய தேவையில்லை
* ஒரு முறை கட்டணமாக 23.30 லட்சம் ரூபாய் செலுத்தினால் போதும்
* இந்த கோல்டன் விசா பெற்றவர்கள், அந்த நாட்டில் தங்கியிருக்கலாம்; வேலை பார்க்கலாம்; படிக்கலாம்
* வாழ்நாள் முழுதும் செல்லுபடியாகும். அதே நேரத்தில் ஐந்து அல்லது 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்து கொள்ள வேண்டும்
* உள்நாட்டைச் சேர்ந்தவர்கள் ‘ஸ்பான்சர்’ செய்ய தேவையில்லை
* இந்த விசா பெற்றவர்கள், வெளிநாடுகளில் ஆறு மாதங்கள் வரை தங்கலாம். அவர்களுடைய குடியிருக்கும் உரிமை பறிபோகாது
* எந்த வயதை சேர்ந்த குடும்ப உறுப்பினர்களையும் ஸ்பான்சர் செய்யலாம்
* எத்தனை வேலைக்காரர்களையும் அழைத்து செல்லலாம்