கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கோவிட் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நேற்று வியாழக்கிழமை தகவல்படி, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,302 இருந்து 4,866 ஆக அதிகரித்துள்ளது.
அதேநேரம், நாடு முழுவதும் 7 இறப்புகள் பதிவாகியுள்ளன.
டெல்லியில்…
டெல்லியில் மாத்திரம், ஒரே நாளில் 105 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன.
இதனால், அங்கு மொத்த தொற்று எண்ணிக்கை 562 ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன், அங்கு 5 மாத குழந்தை மற்றும் 87 வயது முதியவர் உட்பட இரண்டு நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.