அஞ்சல் தொழிற்சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
அந்த வகையில் இவ் தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் திருகோணமலை – தோப்பூர் அஞ்சல் அலுவலக ஊழியர்கள்களும் இன்று வியாழக்கிழமை (29) பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.
அரசாங்கம் உரிய நடவடிக்கை
இதன் காரணமாக தோப்பூர் அஞ்சல் அலுவலகம் மூடப்பட்டிருந்ததையும், அஞ்சல் அலுவலகத்திற்கு சேவை பெறுவதற்காக வருகை தந்த பொதுமக்கள் திரும்பிச் சென்றதையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.
அத்தோடு பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் தாம் சேவை வருவதற்காக வந்த போதிலும் அஞ்சல் அலுவலகம் மூடப்பட்டிருக்கிறது.
எனவே பொதுமக்களின் உடைய அசௌகரியங்களை தவிர்ப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் தோப்பூர் அஞ்சல் அலுவலகத்திற்கு சேவை பெறுவதற்காக வருகை தந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.