ஆதாரத்தை காட்டிய ஜனனி குணசேகரனுக்கு செக் வைக்கும் ஜனனி!

குணசேகரன் இவ்வளவு நாட்களாக போட்ட ஆட்டத்திற்கான ஆதாரங்களை ஜனனி வீட்டில் காட்டி மணி விழாவை பாதியில் நிறுத்தியுள்ளார்.

எதிர்நீச்சல் தொடர்கிறது

பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று தான் எதிர்நீச்சல் தொடர்கிறது.

இந்த சீரியலில் பெண்கள் வீட்டுக்குள் அனுபவிக்கும் கொடுமைகளை கருவாகக் கொண்டு கதைக்களம் நகர்த்தப்படுகிறது.

படித்த பெண்களை திருமணம் செய்து அவர்களை அடிமையாக வைத்து நடத்துவது தான் குணசேகரனின் வேலையாக உள்ளது. ஆனால் கடைசியாக குணசேகரன் வீட்டுக்கு வந்த ஜனனி குணசேகரனின் எண்ணங்களை முறியடித்து பெண்களை வெளியில் கொண்டு வர முயற்சிக்கிறார்.

குணசேகரனுக்கு மணி விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து கொண்டு வருகிறது. ஆதிரை திருமணம் விடயத்தில் கலாட்டா செய்த ஜான்சி ராணி மொத்தமாக மாறி காவி உடையில் வீட்டிற்குள் வந்திருக்கிறார்.

இந்த நிலையில், வீட்டிலுள்ள அனைவரும் மணி விழாவுக்கு கிளம்பி விட்டார்கள். ஆனால் ஈஸ்வரி மாத்திரம் கிளம்பாமல் அப்படியே அமர்ந்திருக்கிறார்.

இப்படி சம்பவம் வீட்டுக்குள் சென்றுக் கொண்டிருக்கும் பொழுது மெதுவாக குணசேகரன் சக்தியிடம், “விழா நன்றாக நடக்குமா? உன்னுடைய மனைவி நினைத்தால் தான் பயமாக இருக்கிறது..” என கிளப்பி விடுகிறார். ஆனாலும் சக்தி, “அப்படியெல்லாம் இல்ல அண்ணே..” என சமாதானம் செய்து அழைக்கிறார்.

மணி விழாவுக்கு காலையில் எழுந்து அனைவரும் ஆயத்தமாக ஆரம்பிக்கிறார்கள். ஆனால் ஈஸ்வரி மாத்திரம் அப்படியே அமர்ந்திருக்கிறார்.

பாதியில் நின்ற மணி விழா
இது ஒரு புறம் இருக்கையில், மணி விழா ஆரம்பிக்கும் நேரத்தில் ஈஸ்வரி வராமல் அவருடைய அறையில் ஜனனியுடன் அமர்ந்திருக்கிறார்.

கதிர், ஐஸ்வர்யாவிடம் கூறி, பெரியம்மாவை அழைத்து வா என்கிறார். நந்தினி, “நான் செல்கிறேன்..” என்றதும், “நீ வேண்டாம் ஐஸ்வர்யா போகட்டும்..” என கதிர் அவரை அனுப்பி வைக்கிறார்.

ஐஸ்வர்யா தட்டும் போது கதவை திறக்காத ஜனனியும் ஈஸ்வரியும் அமைதியாக அறையில் அமர்ந்திருக்கிறார்கள். இதனை தொடர்ந்து கதிர், சக்தி உட்பட அனைவரும் சென்று கதவை தட்டுகிறார்கள். ஆனாலும் கதவு திறக்கவில்லை.

ஜனனியின் காலை உடைத்து கொடுமை செய்த குணசேகரனை கைதுச் செய்ய பொலிஸார் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.