எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது முனநூல் கணக்கில் ஒரு சதுரங்கப் பலகையின் படத்தை பதிவேற்றியுள்ளமை கொழும்பு அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சதுரங்கப் பலகை மூலம் உள்ளுராட்சிசபைகளில் ஆட்சியமைப்பதற்கு எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகள் அல்லது உடன்பாடுகள் அவசியம் என்பதை சஜித் பிரேமதாச கோடிட்டுக்காட்டியுள்ளதாக அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர்.
பல உள்ளுராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்கு ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயார் என்பதை இது வெளிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.