நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.
குரு பகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். மே 14 ஆம் தேதி குரு பெயர்ச்சி நிகழ உள்ளது.
இந்த குரு பெயர்ச்சியால் குரு பகவானின் பார்வை மிதுன ராசியில் இருந்து துலாம், தனுசு, கும்ப ராசிகளின் மீது விழுகிறது. எனவே இந்த குருப்பார்வையால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் சுக்கிர பகவானை அதிபதியாக கொண்டுள்ளனர்.
குரு மிகப்பெரிய யோகம் கொடுக்கப்போகிறார்.
பொருளாதாரத்தில் மேன்மை கிடைக்கும்.
பல வழிகளில் பணம் வர போகிறது.
எதிர்பார்த்த நல்ல வேலை கிடைக்கும்.
வாழ்க்கையில் துன்பங்கள் முடிவிற்கு வரும்.
குடுபத்துடன் நேரத்தை செலவிடுவீர்கள்.
கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் தீரும்.
நீங்கள் வியாழக்கிழமை குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வணங்க நன்மைகள் அதிகரிக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் சூரியனின் அதிபதியாவார்.
குரு பெயர்ச்சியால் குரு பகவான் 11 ஆவது வீட்டிற்கு செல்கிறார்.
நீங்கள் தொழிலில் கஷ்டப்பட்டாலும் அதற்கு லாபம் அதிகமாக கிடைக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பெற்ற பிள்ளைகள் மூலம் நன்மை கிடைக்கும்.
பணத்திற்கான கஷ்டம் குறையும்.
மன அழுத்தம் நீங்கி தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
துலாம்
உங்களுக்கு அதிபதியாக இருப்பவர் சுக்கிரன்.
குரு பெயர்ச்சியால் பதவியில் முன்னேற்றம் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்டகரமான காலகட்டமாகும்.
உங்கள் குடும்பத்தில் சுபிட்சமும் சந்தோஷமும் ஏற்படும்.
குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் பல செல்வங்களுக்கு அதிபதி நீங்கள் தான்.
பணத்திற்கு இருந்த கஷ்டம் இத்தோடு முடிவிற்கு வரும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு அதிபதி குரு பகவான் உங்கள் ராசிக்கு 7ஆம் வீடான களத்திர ஸ்தானத்தில் பயணம் செய்யப்போகிறார்.
உங்கள் வாழ்க்கைக்கு எது ஏற்றதோ அது கிடைக்கப்போகின்றது.
கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
இதுநாள் வரை இருந்த பிரச்சினைகள் நீங்கி குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.
குரு பகவான் கஷ்டங்கள், பிரச்சினைகளில் இருந்து உங்களை விடுவிக்கப் போகிறார்.
பணம் ஏதாவது வழியில் இருந்து வரும்.
கும்பம்
சனிபகவானின் தொல்லை இனி உங்களுக்கு இருக்காது.
இந்த குருப்பெயர்ச்சி மூலம் நீண்ட நாள் கஷ்டங்கள், கவலைகள் நீங்கப் போகிறது.
நடக்காத காரியத்தை நினைத்தாலும் காலபோக்கில் குரு நிறைவேற்றுவார்.
நீங்கள் நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
தொழில் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும்.
பணத்திற்கான கஷ்டம் இருக்காது.