நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சர் அநுர கருணாதிலக மற்றும் பிரதியமைச்சர் டி. பி. சரத் ஆகியோர் இன்று (25) காலை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, யாழில் நிர்மாணிக்கப்பட்டு வரும் யாழ்.மாநகர சபை மண்டபத்தின் வேலைத் திட்டங்களையும் பார்வையிட்டுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீபவானந்தராஜா, றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, நகர அபிவிருத்தி சபை அதிகாரிகள், யாழ் மாநகர சபை ஆணையாளர் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் இதன்போது பங்கேற்றிருந்தனர்.