மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்குமே, அவசர பண தேவை என்ற சூழ்நிலை கட்டாயம் ஏதாவது ஒரு கால கட்டத்தில் வரும். பத்து நாளைக்குள் இவ்வளவு தொகையை புரட்ட வேண்டும். மூன்று மாதத்திற்குள் இந்த பணத்தை புரட்ட வேண்டும், இல்லையென்றால் பெரிய அவமானம் வந்துவிடும் என்ற இக்கட்டான சூழ்நிலை எல்லாம் பல பேருக்கு இருக்கிறது.
சில சமயங்களில் எதிர்பாராத மருத்துவ செலவு, அவசர தேவைக்காக பணம் தேவைப்படும். இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில். கேட்ட இடத்தில் பணம் கிடைக்காது. யாரும் கடன் கொடுக்க முன்வர மாட்டார்கள். இப்படிப்பட்ட பண பிரச்சனைகளில் எல்லாம் நீங்கள் சிக்கிக் கொண்டால் என்ன செய்வது, விடாமல் முயற்சியை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.
பணத்தை சம்பாதிக்கும் வழிகளை எல்லாம் அலசி ஆராய்ந்து பார்த்து, உங்களுக்கு எது தோதாக அமைகிறதோ, அந்த வழியை தேர்ந்தெடுத்து பணத்தை புரட்டலாம். விடாமுயற்சி முதல் வழி. முயற்சியில் சோர்வு வரக்கூடாது. நம்பிக்கையில் ஒரு சிறு துளி அளவும் சந்தேகம் இருக்கக் கூடாது. இப்படி விடாமல் முயற்சி செய்யும் போது நிச்சயமாக நமக்கு வேண்டிய பணத்தை, நாம் புரட்டிக் கொள்ளலாம்.
இந்த ஒரு விளக்கை வீட்டில் ஏற்றி வைப்பதன் மூலம் துரதிஷ்டம் விலகி, அதிர்ஷ்ட காற்று உங்கள் பக்கம் வீச துவங்கும். தேவையான பணம் உங்கள் கையை வந்து சீக்கிரம் சேர்வதற்கான வாய்ப்புகளும் ஒன்று கூடி வரும். பணத் தேவையை பூர்த்தி செய்யும் அந்த விளக்கை வீட்டில் எப்படி ஏற்றுவது ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம்.
மூன்று எண்ணெய் சேர்ந்த விளக்கு இது. நல்லெண்ணெய், புங்க எண்ணெய், இலுப்பெண்ணெய். இந்த மூன்று எண்ணெய்களும் தரமான எண்ணெய்களாக இருக்க வேண்டும் செக்கில் ஆட்டி எடுக்கப்பட்ட எண்ணெயாக இருக்க வேண்டும். மூன்றையும் வாங்கி சம அளவுகளில் கலந்து கொள்ளுங்கள். புங்க எண்ணெய் 50 ml, இலுப்பெண்ணை 50 ml, நல்லெண்ணெய் 50 ml, இப்படி கலந்து ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்து விட வேண்டும்.
முடிந்தால் காலை சூரிய உதயத்திற்கு முன்பு பிரம்ம முகூர்த்த நேரத்தில் சுத்தபத்தமாக இருக்கும் பட்சத்தில் குளிக்கவில்லை என்றாலும் சரி, ஒரு மண் அகல் விளக்கில் இந்த தயார் செய்து வைத்திருக்கும் எண்ணெயை ஊற்றி, பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றி வைத்துவிட்டு, பணம் வேண்டும், பணம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருந்தால், வேண்டிய பணம் தானாக உங்கள் கையை வந்து சேரும்.
காலையில் இந்த வேண்டுதலை வைக்க முடியாதவர்கள் இரவு தூங்க செல்வதற்கு முன்பாக, இந்த விளக்கை ஏற்றி வைத்துவிட்டு, பிரார்த்தனை செய்துவிட்டு தூங்கச் செல்ல வேண்டும். இவ்வளவுதான் பரிகாரம். ஒரு நாள் மட்டும் இதை செய்துவிட்டு பலனை எதிர்பார்க்கக் கூடாது. இந்த பரிகாரத்தை தினமும் செய்யுங்கள். 48 நாள் செய்யும் போது உங்களை நோக்கி பணவரவு படை எடுக்கும். நிச்சயமா நம்ப மாட்டீங்க. எப்படி பணம் கைக்கு வந்து சேர்ந்தது என்று உங்களுக்கு தெரியாது.