கொழும்பு – மொரட்டுவைப் பல்கலைக்கழக ஆய்வகத்தில் இரசாயன கசிவு!

கொழும்பு – மொரட்டுவைப் பல்கலைக்கழக ஆய்வகத்தில் இரசாயன கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கொழும்பு தீயணைப்பு பிரிவின் 3 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

அதோடு அணுசக்தி அதிகாரசபையின் அதிகாரிகள் குழுவும் குறித்த இடத்திற்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.