மீண்டும் உயர்வடைந்த தங்கத்தின் விலை!

ஆபரணத் தங்கத்தின் விலை, சமீப காலமாக அதிகரித்து வரும் நிலையில், இன்று உச்சத்தை தொட்டுள்ளது பாமர மக்களிடையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இன்றைய தங்கம் விலை
ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து சில தினங்களாக குறைந்து வந்த நிலையில், இன்று சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்துள்ளது. நேற்றைய தினத்தில் கிராம் ரூ.8,025 ஆகவும் சவரன், ரூ 64,200 ஆகவும் இருந்து வந்தது.

இந்நிலையில் சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 அதிகரித்து, 8,045 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 280 அதிகரித்து, 64,360 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

கடந்த வருடங்களில் 55 ஆயிரத்திற்கும் குறைவாக விற்கப்பட்ட தங்கத்தின் விலை, தற்போது 60 ஆயிரத்தை தாண்டி செல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அடுத்து வரும் நாட்களில் தங்கம் விலை குறைவதற்கு வாய்ப்புள்ளதா என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது.

இதே போன்று வெள்ளியின் விலையும் சற்று குறைந்துள்ளது. இன்று கிராமுக்கு ரூ.107.00 ஆகவும், கிலோவிற்கு ரூ.1,07,000 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.