காசாவின் பகுதியை இஸ்ரேலிடம் கையளிக்கும் அமெரிக்கா

காசாவில் மோதல்கள் முடிவடைந்ததும் அந்த பகுதியை இஸ்ரேல் அமெரிக்காவிடம் கையளிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

காசாவை அமெரிக்கா கையகப்படுத்துவது குறித்த டிரம்பின் கருத்திற்கு மாறாக அவரது நிர்வாகத்தின் அதிகாரிகள் கருத்து வெளியிட்டிருந்த நிலையிலேயே டிரம்ப் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

சண்டை முடிவடைந்ததும் இஸ்ரேல் காசா பள்ளத்தாக்கினை அமெரிக்காவிடம் ஒப்படைக்கும் என தெரிவித்துள்ள அவர் பாலஸ்தீனியர்களை வேறு பகுதிகளில் மீள்குடியேற்றும் தனது திட்டத்தினை மீள வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை இதற்கு அமெரிக்க இராணுவத்தினர் அவசியமில்லை எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.