யாழ் பல்கலை மாணவர்களின் செயற்ப்பாடு தொடர்பில் கொத்தித்தெழும் சர்த்வீரசேகர

இலங்கையின் சுதந்திர தினத்தன்று , தேசிய கொடியை இறக்கி, கறுப்பு கொடியை ஏற்றிய யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகரா தெரிவித்துள்ளார்.

சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை இறக்கி , கறுப்பு கொடியை ஏற்றியமை தேசிய கொடியை அவமதித்த செயலாகும். அதனை செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் , அதற்கு அனுமதித்த , பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசியர்கள் பதில் சொல்ல வேண்டும்.

அவர்களிடம் விளக்கம் கோர வேண்டும். நாட்டின் தேசிய கொடியை ஏற்க மறுப்பவர்கள் தேச துரோகிகளே அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார் .