பாதாள உலக கும்பலின் தலைவரும் பிரபல போதைப்பொருள் கடத்தல் காரருமான “மிதிகம ருவன்” என்று அழைக்கப்படும் ஜயசேகர விதானகே ருவன் சாமர என்பவரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
“மிதிகம ருவன்” என்பவர் பாதாள உலக கும்பலின் தலைவரும் பிரபல போதைப்பொருள் கடத்தல் காரருமான “ஹரக் கட்டா”வின் உறவினர் ஆவார்.
இவர் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என்பதுடன் “ஹரக் கட்டா” குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து தப்பிச் செல்வதற்கு உதவி செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
“மிதிகம ருவன்” என்பவர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் துபாயில் வைத்து கைது செய்யப்பட்டுக் கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டு பின்னர் நீதிமன்ற உத்தரவின் கீழ் கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.