பிரச்சனைகளை சரி செய்ய கற்ப்பூரம் செய்யும் மாயம்!

சில வீடுகளில் தீராத பிரச்சனைகள் தொடர்கதையாக இருக்கும். பிரச்சனைக்கு மேல் பிரச்சனை வருமே தவிர இருக்கும் பிரச்சினைகளுக்கு ஒரு நாளும் தீர்வு கிடைக்காது. அந்த பிரச்சனையின் காரணமாக இருக்கும் வீட்டையே வேறு இடத்திற்கு மாற்றலாம் என்று கூட சில பேர் சிந்திப்பார்கள்.

உதாரணத்திற்கு இரவு படுத்தால் நல்ல தூக்கம் வராது. வீட்டில் இருப்பவர்களுக்கு தீராத நோய்நொடி பிரச்சனை இருக்கும். வீட்டில் ஏதாவது ஒரு துக்க செய்தி நடந்து கொண்டே இருக்கும். கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவு வந்து கொண்டே இருக்கும். பிள்ளைகளுடைய வாழ்க்கையில் நல்லது நடக்காது.

தேவையில்லாத எரிச்சல், மனக்கசப்பு என்று வீட்டில் முழுமையாக நிம்மதி இழந்து காணப்படும். இவ்வளவு பிரச்சனைகளுக்கும் நல்லதொரு தீர்வு கிடைக்க வேண்டும் என்றால், அது நிச்சயம் அந்த குலதெய்வத்தின் மூலமாகத்தான் இருக்க முடியும். அந்த வகையில் குலதெய்வத்தை நினைத்து 21 நாட்கள் இந்த எளிமையான பரிகாரத்தை செய்தாலே, குடும்பத்தில் இருக்கும் அத்தனை பிரச்சனைகளுக்கும் விடிவுகாலம் பிறந்துவிடும்.

உங்கள் பிரச்சினையை தீர்க்க போகும் அந்த பரிகாரம் என்ன, பரிகாரத்தை எப்படி செய்வது, யார் செய்வது, ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் கற்பூர பரிகாரம் உங்களுக்கு வாய்ப்பு இருக்கிறது என்றால், நீங்கள் தூங்கக்கூடிய இடத்திலேயே இந்த பரிகாரத்தை செய்யலாம். இட வசதி இல்லை என்பவர்கள், பூஜையறையில் வைத்தும் இந்த பரிகாரத்தை செய்யலாம். எல்லா வேலையும் முடித்து விட்டு தூங்கு செல்வதற்கு முன்பு, ஒரு சின்ன மண் அகல் விளக்கு எடுத்துக் கொள்ளுங்கள். அந்த அகல் விளக்கில் ஒரு கட்டி கற்பூரத்தை வைத்து, கற்பூரத்தை கொளுத்தி விட வேண்டும்.

குலதெய்வத்தை மனதார நினைத்துக் கொண்டு, உங்களுக்கு இருக்கக்கூடிய அந்த குறிப்பிட்ட பிரச்சனை தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். நோய்நொடி பிரச்சனை தீர்வதற்காக இருக்கலாம், கணவன் மனைவி சண்டை தீருவதற்காக இருக்கலாம், கடன் சுமை தீருவதற்காக இருக்கலாம், என்ன பிரச்சனையாக இருந்தாலும் அதை மனதில் நினைத்து, அந்த கற்பூரம் எரிந்து முடியும் வரை குலதெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்து கொண்டு, பிறகு தூங்கச் செல்ல வேண்டும். இவ்வளவுதான்.

இந்த பரிகாரத்தை முடித்துவிட்டு வேறு எந்த வேலையையும் வீட்டில் செய்யக் கூடாது தூங்க செல்ல வேண்டியதுதான். இதை உங்களுக்கு நீங்களே செய்து கொண்டாலும் சரி, அல்லது உங்களுடைய பிள்ளைகளுக்கு பிரச்சனைகள் சரியாக வேண்டும் என்று தாய் தந்தையர்கள் இந்த பரிகாரத்தை செய்தாலும் சரி, கணவருடைய பிரச்சனை தீர வேண்டும் என்று மனைவி 21 நாள் இந்த பரிகாரத்தை செய்தாலும் நல்லது நடக்கும். தொடர்ந்து 21 நாட்கள் இதே போல தூங்க செல்வதற்கு முன்பு, கட்டி கற்பூரத்தை ஏற்றி வைத்துவிட்டு, வேண்டுதல் வைக்க வேண்டும். மெழுகு கற்பூரம் பயன்படுத்த வேண்டாம். நாட்டு மருந்து கடைகளில் கட்டி கற்பூரம் கொடுப்பாங்க.

சூடம் என்று சொல்லுவார்கள். அதை வாங்கி இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். நிச்சயம் தீர்க்கவே முடியாத பிரச்சனைகளுக்கு கூட 21 நாட்களில் நல்லதொரு தீர்வு கிடைக்கும். 21 நாள் எந்த சூழ்நிலையிலும் இடைவிடாது இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும் அதற்கு ஏற்றது போல நாளை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். சில வீடுகளில் எல்லாம் தீராத நோய்நொடி பிரச்சனை இருக்கும். மருந்து மாத்திரை கையோடு தான் திரிந்து கொண்டிருப்பார்கள். குறிப்பாக பிள்ளைகளுடைய உடல் நலனில் குறைபாடு இருந்தால், அவர்கள் படுக்கும் இடத்திலேயே இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். 21 நாளில் நல்லதொரு தீர்வை பெறலாம்.

இதோடு சேர்த்து இன்னொரு பரிகாரமும் இருக்கிறது. எவ்வளவு பெரிய உடல் உபாதைகளையும் தீர்க்கக் கூடிய சக்தி துளசி இலைகளுக்கு உள்ளதாக நம்முடைய முன்னோர்கள் சொல்லுவார்கள். இரவு ஒரு டம்ளர் தண்ணீரில் துளசி இலைகளை போட்டு வைத்து விடுங்கள். மறுநாள் காலை எழுந்து பல் துலக்கி விட்டு அந்த துளசி தீர்த்தத்தை குடித்து விட வேண்டும். இதையும் 21 நாள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். இலைகளோடு தண்ணீரை குடிக்க முடியவில்லை என்றாலும் அந்த இலையை எடுத்து வெளியில் போட்டுவிட்டு, அந்த தீர்த்தத்தை மட்டும் பருகிவர, தீரா உடல் உபாதைகள் தீரும் என்பது நம்பிக்கை.