கொழும்பு விடுதியில் தங்கியிருந்த பிரித்தானிய பிரஜை திடீர் மரணம்!

கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த பிரித்தானிய (UK) பெண் ஒருவர் திடீர் என உயிரிழந்துள்ளார்.

திடீர் சுகயீனம்
கொள்ளுப்பிட்டி ஆர்.ஏ. டி மெல் மாவத்தையில் உள்ள விடுதியில் தங்கியிருந்த குறித்த பெண், திடீர் சுகயீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

குறித்த விடுதியில் தங்கியிருந்த மூன்று வெளிநாட்டவர்கள் நோய்வாய்ப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மூவரில் 24 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.